58
“நான் போய்ச் செய்வது என்ன என்று கேட்டிறாயே! நீ அஞ்சும் இராமனைக் கொல்ல நான் உறுதி பூண்டுள்ளேன். ஆகவே உனக்கு அந்த பயம் வேண்டாம். சீதையை நான் தூக்கி வருவதற்கான வஞ்சகச் செயலை நீ செய்.”
◯◯
ஆயவன் அனைய கூற– மாரீசன் அவ்வாறு கூறவே; அரக்கர் கோன்– அரக்கர்க்கு அரசனாகிய இராவணன்; ஐய– ஐயனே; நொய்து உன் தாயை– பெண் என்று கருதாது இழிந்த முறையில் உனது தாயின்; ஆருயிர் உண்டானை– அரிய உயிரை அழித்த அந்த இராமனை; கொல்ல– கொல்லுவதற்கு; யான் சமைந்து நின்றேன்– நான் உறுதி பூண்டுள்ளேன்; போய் ஐயா புணர்ப்பது. என்னை– நீ போய்ச் செய்யக் கூடிய சூழ்ச்சி என்ன? என்பது– என்று வினவுகல்; பொருத்திற்று ஒன்றோ– உனக்குப் பொருத்தமான செயலோ? அவளை– அந்த சீதையை; மாயையால் வஞ்சித்து– உனது மாயத்தால் வஞ்சித்து ஏமாற்றி; வெளவுதல் அன்றோ– நான் அவளை அபகரித்து வருதல் அன்றோ.
◯◯
“என்ன மா மாயம் யான் மற்று
இயற்றுவது? இயம்புக” என்றாள்
“பொன்னின் மான் ஆகிப் புக்கு அப்
பொன்னை மால் புணர்த்துக” என்ன
‘அன்னது செய்வென்’ என்னா
மாரீசன் அமைந்து போனான்.
மின்னும் வேல் அரக்கர் கோனும்
வேறு ஒரு நெறியில் போனான்.
“அங்கு சென்று நான் செய்யக்கூடிய மாயம் யாது?” என்று கேட்டான் மாரீசன்.