பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6


சிவந்த வாயினை உடைய சீதையும்‌, கார்முகில்‌ வண்ணனாகிய இராமனும்‌ சிங்காதனத்திலே இனிது அமர்ந்து இருக்க உனது மகன்‌ பரதன்‌ தரையிலே நிற்கும்‌ கதி வந்துவிட்டது. இதற்கு நீ மகிழ்ந்தது ஏன்‌? உனது மன உறுதி என்ன?

சிவந்த வாய்‌ சீதையும்‌– சிவந்த வாயினை உடைய சீதையும்‌; கரிய செம்மலும்‌– க௫ நிறத்தை உடைய இராமனும்‌; நிவந்த ஆசனத்து– உயர்ந்த சிங்காதனத்தில்‌; இனிது இருப்ப– இனிமையாக வீற்றிருக்க. நின்‌ மகன்‌–உனது மகன்‌ பரதன்‌; அவந்தனாய்‌– ஒன்றும்‌ இல்லாதவனாய்‌; வெறு நிலத்து– தரையிலே; இருக்கல்‌ ஆனபோது– இருக்கும்‌ கதி வந்து விட்ட பிறகு; உவந்த ஆறு– மகிழ்ந்த காரணம்‌; என்‌?– என்ன? இதற்கு உறுதி யாது– இதற்கு நீ கொண்ட மன உறுதி என்ன?

அரசர்‌ இல்‌ பிறந்து பின்‌
        அரசர்‌ இல்‌ வளர்ந்து
அரசர்‌ இல்‌ புகுந்து
        பேர்‌ அரசி ஆன நீ
கரை செயற்கு அரும்‌
        துயர்க்‌ கடலில்‌ வீழ்கின்றாய்‌
உரை செயக்‌ கேட்கிலை
        உணர்தியோ? என்றாள்‌.

சாதாரண குடும்பத்திலே பிறந்தவளாகயிருந்தால்‌ அவளுக்கு அரசியல்‌ தெரியாது எனலாம்‌. மாற்றாள்‌ மகன்‌ அரசன்‌ ஆதல்‌ குறித்து மகிழ்வடைகிறாள்‌ எனலாம்‌,

ஆனால்‌ நீயோ அரச குடும்பத்திலே பிறந்தவள்‌. அரச குடும்பத்திலே வளர்ந்தவள்‌. அரச குடும்பத்திலே புகுத்தவள்‌; பட்டத்து அரசி வேறு,