பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79



வெருவலை நின்றனை
        வேறு என்? யான் இனி
எரியிடைக் கடிது வீழ்ந்து
        இறப்பென் ஈண்டு” என

ஒரு நாள் பழகிய போதினும் உயிரைக் கொடுத்து உதவி செய்வர். யார்? உண்மை அன்புடையோர். அவ்விதமிருக்க நீயோ இராமன் உயிருக்கு ஆபத்து வந்தது அறிந்தும் அசையாது, நிலை பெயராது, அஞ்சாது, கலங்காது நிற்கின்றாய். இனி எனக்கு என்ன இருக்கிறது? தீயிலே விழுந்து உயிர் துறப்பேன் என்று கூறி,

ஒரு பகல் பழகினார் – ஒரு நாளே பழகினவர் ஆயினும்; (உண்மை அன்புடையோர்) உயிரை ஈவர் (அந்த நண்பருக்காக) தமது உயிரையும் கொடுத்து உதவி செய்வர்; (அங்ஙனமிருக்க) பெருமகன் – தலைவனாகிய இராமன்; உலைவு உறு பெற்றி – அழிவடைந்தான் என்பது; கேட்டும் – காதால் கேட்டும்; வெருவலை – பதறவில்லை; நின்றனை – என் எதிரில் நின்று கொண்டிருக்கிறாய்; வேறு என் எனக்கு வேறு கதி என்ன இருக்கிறது? இனியான் – இனிமேல் நான்; கடிது – விரைவிலே; எரி இடை – தீயிலே; வீழ்ந்து – விழுந்து; ஈண்டு – இப்போதே; இறப்பன் – உயிர் துறப்பேன்; எனா – என்று.

தாமரை வனத்திடைத்
        தாவும் அன்னம் போல்
தூம வெம் காட்டு எரி
        தொடர்கின்றாள் தனை
சேம வில் குமரனும்
        விலக்கிச் சீறடிப்
பூமுக நெடு நிலம்
        புல்லிச் சொல்லுமால்