பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



93



“தயரதன் தொல் குலத்
        தனயன், தம்பியோடு
உயர்குலத்து அன்னைசொல்
        உச்சி ஏந்தினான்
அயர்வு இலன்; இவ்வழி
        உறையும் அன்னவன்
பெயரினைத் தெரிகுதிர்
        பெருமையீர்” என்றாள்.

“பழைமை மிகும் இட்சுவாகு குலத்திலே தோன்றிய தசரத சக்கரவர்த்தியின் மகன் – தன் தாயின் கட்டளையைத் தலைமேல் தாங்கி; தம்பியோடு கான்போந்து அயர்வின்றி இங்கே உறைகின்றார். அவர் பெயரை நீவிர் அறிந்திருப்பீரே! அறியீரோ?” என்று கேட்டாள்.

பெருமையீர்– பெருமைக்கு உரியவரே. தொல் குலம்– பழைமையான இட்சுவாகு குலத்தைச் சேர்ந்த; தயரதன்– தசரத சக்கரவர்த்தியின்; தனயன்– குமாரன்; உயர் குலத்து– உயர்ந்த குலத்திலே பிறந்த; அன்னை சொல்– தாயின் கட்டளையை; உச்சி ஏந்தினான்– தலைமேல் தாங்கினான்; தம்பியோடு– தம்பியாகிய லட்சுமணனோடு; அயர்வு இலன்– சிறிதும் சோர்வு வருத்தம் இன்றி; இவ்வழி உறையும்– இவ்விடத்தில் வசிக்கின்றார்; அன்னவன்– அவரது; பெயரினை– பெயரை; தெரிகுதிர்– அறிந்திருப்பீரே; என்றாள்– என்று சொன்னாள்.


“கேட்டனன்; கண்டிலென்
        தெழுவு கங்கை நீர்
நாட்டிடை ஒரு முறை
        நண்ணினேன்; மலர்