பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

101



“ஆண்டையான் அரசு
        வீற்றிருந்த அந்நகர்
வேண்டியான் சில பகல்
        உறைதல் மேயினேன்
நீண்டனென் இருந்து
        அவற் பிரியும் நெஞ்சு இலேன்
மீண்டனென்” என்றனன்
        வினையம் உன்னுவான்.

அந்நகரிலே நான் சில நாட்கள் தங்கியிருந்தேன். அவ்விடம் விட்டுப் பிரியமனமிலேன். மீண்டும் போகிறேன் என்றான்.

ஆண்டையான்– தலைவனான அவன்; அரசு வீற்றிருந்த– அரசாட்சி புரிந்து வீற்றிருந்த; அந்நகர்– அந்த இலங்காபுரியிலே; யான்– நான்; வேண்டி– விரும்பி; சில பகல்– சில நாட்கள்; உறைதல் மேயினேன்– தங்கியிருந்தேன்; நீண்டனென் இருந்து– அவ்விடவிருந்து நீங்கி நீண்ட நாள் இருந்து விட்டேன்; அவர் பிரியும் நெஞ்சு இலேன்– அவருடன் நெருங்கிப் பழகிய பின் பிரிய மனமிலேன்; மீண்டனென்– திரும்பிவிட்டேன்; என்றனன்– என்று கூறினான்; வினையம் உன்னுவான்– வந்த காரியத்திலே கண்ணும் கருத்துமாயிருந்த இராவணன்.

“வனத்திடை மாதவர்
        மருங்கு வைகலீர்;
புனல் திரு நாட்டிடைப்
        புனிதர் ஊர் புக