பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114


ஆண்டு ஆயிடை தீயவன்
        ஆயிழையைத்
தீண்டான்; அயன் மேல் உரை
        சிந்தை செயாத்
தூண் தான் எனல் ஆம்
        உயர் தோள் வலியால்
நீண்டான் நிலம்; யோசனை கீழொடுமேல்.

தீயவனாகிய அந்த இராவணன் சீதாபிராட்டியைத் தொட அஞ்சினான். காரணம் பிரமதேவன் அவனுக்களித்த சாபம். அந்த சாபம் அவனது நினைவுக்கு வந்தது. எனவே தூண்கள் என்று சொல்லத்தக்க தன்னுடைய தோள் வலியாலே சீதை இருந்த அந்த இடத்தை அதாவது நிலத்தை ஒரு யோசனை அளவுக்கு அப்படியே பெயர்த்து எடுத்தான்.

ஆண்டு – அப்பொழுது; தீயவன் – தீயவனாகிய அந்த இராவணன்; ஆயிழையை – பிராட்டியை மேல் அயன் உரை – மேனாள் பிரமதேவன் இட்ட சாபச் சொல்லை; சிந்தை செய்யா – எண்ணி; தீண்டான் – அவள் மேனியைத் தொடாமல்; தூண்தான் எனல் ஆம் – தூண்கள் என்று சொல்லத் தக்க, உயர்தோர் – உயர்ந்த தன் தோள்களின் வலியால் – பலத்தினாலே; ஆயிடை – அந்த இடத்து; நிலம் கீழொடு மேல் – நிலத்தை அடியோடு; யோசனை – ஒரு யோசனை விஸ்தீரணத்துக்கு; நீண்டான் – பெயர்த்து எடுத்தான்.

கொண்டான் உயர் தேர் மிசை
        கோல் வளையாள்
கண்டாள்; தன் ஆருயிர்
        கண்டிலளால்