பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115


மண் தான் உறும்
        மீனின் மயங்கினளால்;
விண் தான் வழியா
        எழுவான் விரைவான்.

அவ்வாறு பூமியைப் பெயர்த்து எடுத்த இராவணன் என்ன செய்தான்? தன் தேர் மேல் கொண்டுபோய் வைத்தான். இது கண்டாள் சீதை. உயிரற்றவள் போலானாள். தண்ணீரிலிருந்து எடுத்துத் தரை மீது போடப்பட்ட மீன்போல் மயக்கமுற்றாள். வான் மார்க்கமாகத் தன் தேரைச் செலுத்த விரைந்தான் இராவணன்.

உயர் தேர் மிசை கொண்டான் – (அங்ஙனம் சீதா தேவியை எடுத்த இராவணன்) தனது உயர்ந்த தேர் மீது வைத்துக் கொண்டான்; கோல் விளையாள் – அழகிய வளையல்களை அணிந்த சீதை; கண்டாள் – அச் செயல் கண்டாள்; தன் ஆர் உயிர் கண்டிலள். உயிரற்றவள் போல் ஆனாள்; மண் தான் உறும் – தரையில் போட்ட மீனின் – மீன்போல; மயங்கினள் – மயக்கமுற்றாள்; (அப்பொழுது இராவணனும்) விண்தான் வழியா – ஆகாய மார்க்கமாக; எழுவான் – எழுந்து செல்லும் பொருட்டு; விரைவான் – விரைபவன் ஆனான்.

‘விடுதேர்’ என வெம் கனல்
        வெந்து அழியும்
கொடி போல் புரள்வாள்
        குலைவாள் அயர்வாள்
துடியா எழுவாள்
        துயரால் அழுவாள்
‘கடிதா அறனே! இது
        கா’ எனு மால்.