பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130


இவ்விதம் சீதா பிராட்டியை வானவழியே தூக்கிச் சென்ற இராவணன், இலங்காபுரிபில் இருக்கும் அசோகவனத்திற்குக் கொண்டு போய்; கொடிய இராட்சத மகளிர் நடுவே சிறை வைத்தான்.

அரக்கனும் – அரக்கனான இராவணனும்; வஞ்சியை – வஞ்சிக்கொடி போன்ற சீதா தேவியை: திரு உருத் தீண்ட அஞ்சுவான் – அவளது திருமேனி தொடுதற்குப் பயந்து; ஆய் இடை – அந்த இலங்கை மா நகரிலுள்ள; சிஞ்சுப வனத்திடை – அசோக வனத்திலே; நஞ்சு இயல் – விஷம் போன்ற கொடிய நச்சுத் தன்மை கொண்ட; அரக்கியர் நடுவண் – இராட்சசிகள் நடுவே; செஞ்செவே – செம்மையாக; சிறை வைத்தான் – காவலில் வைத்தான்.

இந்நிலை இணையவன்
        செயல் இயம்பினாம்
“பொன் நிலை மானின்
        பின் தொடர்ந்து போகிய
மன் நிலை அறிக” என
        மங்கை ஏவிய
பின் இளையவன் நிலை
        பேசுவோம் அரோ.

இதுவரை சீதை, சடாயு, இராவணன் ஆகியோரது செயல் கூறினோம்.

பொன் மான் பின்னே சென்ற இராமபிரானது நிலையை அறிவாயாக. என்று சீதா பிராட்டியால் ஏவப்பெற்ற லட்சுமணனின் நிலையை இனிக் கூறுவாம்.