பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15



அவ்வை நீங்கும் என்று
        அயோத்தி வந்து அடைந்த அம்மடந்தை
தவ்வை ஆம் எனக் கிடந்தனள்
        கேகயன் தனயை.

துள்ளித் திரிகின்ற மான் அதை விட்டு பூமியில் படுத்து புரள்வது போலவும் மகிழ்ச்சியுடன் ஆடும் அழகிய மயில் அதை விட்டு ஓய்ந்து கிடப்பது போலவும், சீதையாகிய இலட்சுமி வனம் செல்வது அறிந்து அவள் இருந்த அயோத்திக்கு மூத்தவளாகிய மூதேவி வந்துவிட்டது போலவும் கிடந்தாள் கைகேயி.

கேகயன் தனயை– கேகயன் புதல்வியாகிய கைகேயி; கவ்வை கூர்தர– துன்பம் மிகுதலால்; நவ்வி வீழ்ந்தது என– மான் விழுந்தது போலவும்; நாடக மயில் துயின்றென்ன– குலாவிக் கூத்தாடும் மயில், அஃது ஒழிந்து ஒடுங்கிக்கிடந்தது போலவும்; சனகியாம்-சீதையாகிய; கடி கமழ் கமலத்து அவ்வை– மணம் வீசும் தாமரையில் வீற்றிருக்கும் இலட்சுமி, நீங்கும் என்று– காடு செல்வாள் என்று அறிந்து; அயோத்தி வந்து அடைந்த– அயோத்தி வந்து சேர்ந்த; அம்மடந்தை– இலட்சுமியின்; தவ்வை– மூத்தவளாகிய மூதேவியாம்; எனக் கிடந்தனள்– என்று சொல்லும்படியாக படுத்திருந்தாள்.

பட்டாபிஷேகத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை எல்லாம் கவனித்து விட்டு இரவு கைகேயி அரண்மனைக்குச் சென்றான் தசரதன்.

அங்கே என்ன கண்டான்? கைகேயி இருந்த அலங்கோலம் கண்டான், கண்டு பதைத்தான். அவளை எடுத்து ஆறுதல் மொழி பல கூறினான்.