பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24



புவிப்பாவை பாரம் கெடப்
        போரில் வந்தோரை எல்லாம்
அவிப்பானும் அவித்து அவர்
        ஆக்கையை அண்டம் முற்றக்
குவிப்பானும் எனக்கு ஒரு
        கோவினைக் கொற்ற மெளலி
கவிப்பானும் நின்றேன்; இது
        காக்குநர் காமின் என்றான்.

“இராமன் முடி சூடுவதை எதிர்த்து எவர் வந்தாலும் வருக! அவரை எல்லாம் போரிலே கொன்று அவர் உடலையெல்லாம் பெரும் குவியலாகக் குவித்து அவ்வெற்றியினால் கிடைத்த மகுடத்தை என் தலைவனாகிய இராமனுக்குச் சூட்டுவேன். இதைத் தடுக்க எவர்வரினும் வருக.” என்று முழக்கம் செய்து கொண்டு தெருவிலே வந்தான் இலக்குமணன்.

போரில் வந்தோரை எல்லாம்– என்னை எதிர்த்துப் போரிட வந்தவர்களை எல்லாம்; புவிப் பாரம் கெட அவிப்பானும்– பூமி தேவியின் பாரம் நீங்கும்படியாக அவித்து; அவர் ஆக்கையை– அங்ஙனம் அழித்த அவர் தம் உடலை; அண்டம் முற்ற– உலகம் முழுவதும்; குவிப்பானும்– குவிப்பவனும்; என் கோவின்– எனது ஒரே தலைவனாகிய இராமனை; கொற்ற மெளலி–வெற்றித் திருமுடி; கவிப்பானும்– சூடுபவனும்; ஆக– உறுதி கொண்டு; நின்றேன்– இது காக்குநர் காமின் என்றான்– இதனைத் தடுக்கும் வலியுடையார் தடுப்பீர் என்றான்.

விண்ணாட்டவர் மண்ணவர்
        விஞ்சையர் நாகர் மற்றும்