பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43


விம்மி விம்மி அழுது கொண்டிருந்தான்‌. அந்த விம்மலோடு சொன்னான்‌ “இராமன்‌ வனம்‌ போனது எதனால்‌? ஏதாவது தீங்கு செய்தானா? தெய்வத்தை இகழந்தானா? விதியினாலா? எதனால்‌?” என்று கேட்டான்‌ பரதன்‌.

ஏங்கினன்‌– ஏக்கம்‌ கொண்டவனாய்‌; விம்மலோடு இருந்த ஏந்தல்‌– மன வருத்தத்தோடு இருந்த புருஷோத்தமனாகிய பரதன்‌; அப்பூங்கழல்‌ காலவன்‌– வீரக்‌ கழல்‌ அணிந்த மலர்‌ போலும்‌ திருவடியுடைய அந்த இராமன்‌ வனத்துப்‌ போயது– காட்டுக்குப்‌ போனது; தீங்கு இழைத்ததினோ– தீய செயல்‌ செய்ததனாலோ?; தெய்வம்‌ சீறியோ– தெய்வம்‌ கோபித்ததாலோ?; ஓங்கிய விதியினோ?– யாவற்றினும்‌ மேம்பட்ட ஊழ்வினையினாலோ? யாதினோ?– எதனால்‌; எனா– என்று வினவி.

“குருக்களை இகழ்தலின்‌
        அன்று; குன்றிய
செருக்கினால்‌ அன்று; ஒரு
        தெய்வத்தாலும்‌ அன்று
அருக்கனே அனைய அவ்‌
        அரசர்‌ கோமகன்‌
இருக்கவே வனத்து அவன்‌
        ஏகினான்‌” என்றாள்‌.

இராமன்‌ வனம்‌ சென்றது பெரியோர்களை இகழ்ந்ததால்‌ அன்று; கர்வத்தால்‌ அன்று; தெய்வத்தாலும்‌ அன்று.

அரசன்‌ உயிருடன்‌ இருந்த போதே அவன்‌ கான்‌ சென்றான்‌ என்றாள்‌.