பக்கம்:கம்பன் கவித் திரட்டு 2, 3.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2


பொன்னி எனல் ஆய புனல்
        ஆறும் உள; போதா
அன்னம் உள; பொன் இவளொடு
        அன்பின் விளையாட

அகஸ்திய முனிவரிடத்திலே விடை பெற்றுக் கொண்டு இராமனும் சீதையும் லட்சுமணனும் பஞ்சவடி நோக்கிப் புறப்பட்டனர்.வழியிலே ஜடாயு என்ற கழுகரசனைக் கண்டனர். ஜடாயு அவர்களைப் பஞ்சவடிக்கு அழைத்துச் சென்றது. அங்கே கோதாவரி நதியை அவர்கள் கண்டார்கள்.

(அவ்விடத்தில்) கனி ஈவ–பழங்கள் தரும்; கன்னி இள வாழை–மிகவும் இளமையான வாழை மரங்களும்; கதிர்–கதிர்களையும்; வாலின்–வாலையும் உடைய; செந்நெல் உள–சிவந்த நெற் பயிர்களும் உள; தேன் ஒழுகு போதும் உள–தேன் சொரியும் மலர்களும் உள்ளன; தெய்வப்பொன்னி–தெய்வத் தன்மை பொருந்திய காவிரி; ஆய–அனைய; புனல் ஆறும் உள–வெள்ளம் பெருகும் ஆறும் உண்டு; பொன் இவளொடு–பொன் போன்ற இச் சீதையுடன்; அன்பின் விளையாட–அன்போடு விளையாடுவதற்கு போதா–பெரு நாரைகளும்; அன்னமும்–அன்னப்பறவைகளும்; உள –உள்ளன.

புவியினுக்கு அணியாய், ஆன்ற
        பொருள் தந்து புலத்திற்று ஆகி
அவி அகத்துறைகள் தாங்கி
        ஐந்திணை நெறி அளாவிச்
சவி உறத்தெளிந்து, தண் என்று
        ஒழுக்கமும் தழுவி, சான்றோர்
கவி எனக் கிடந்த கோதா வரியினை
        வீரர் கண்டார்.