பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104



அவனுடைய கால்களைத் தேவ மாதர் வருடிக் கொண்டிருக்கின்றனர். அந்த மண்டபத்திலே உள்ள தூய சந்திரகாந்தக் கற்கள் வீசிய நீர்த்துளிகள் கும்பகர்ணன் முகத்தில் விழ அவன் உறங்கினான்.

***


வானவ மகளிர் - தேவ மாதர்; கால் வருட - அவன் கால்களைப் பிடிக்க; ஆனனம் மாமதி கண்ட - அத்தேவ மாதர்களின் பூரண சந்திரன் போன்ற முகங்களைக் கண்ட; மண்டபத்துள் - அந்த மண்டபத்துள்; ஆய் கதிர் - சிறந்த ஒளிக் கதிர்களை; கால் நகு காந்தம் - வீசி விளங்கும் சந்திர காந்தக் கற்கள்; மீகான்ற - மேலே கக்கிய; காமர் தூநிற - இனிய தூய நிறத்தை உடைய; நறும் நீர் துளி - மணமுள்ள நீர்த்துளிகள்; முகத்தில் தோற்றவே - கும்பகன்னன் முகத்தில் விழுந்து தோற்றம் அளிக்க (அவன் உறங்கினான்).


***

குறுகி நோக்கி மற்றவன்
        தலை ஒரு பதும் குன்றத்
திறுகு திண்புயம் இருபதும்
        இவற்கிலை எனா
மறுகி ஏறிய முனிவு எனும்
        வடவை வெங்கனலை
அறிவு எனும் பெரும் பரவை
        அம் புனலினால் அவித்தான்.

தேவ மாதர் கால் வருடத் தூங்கும் கும்பகன்னனைக் கண்ட உடனே “இவன்தான் இராவணன் போலும்” என்று எண்ணினான் அநுமன். சினம் பொங்கியது. அருகில் சென்றான்; உற்றுக் கவனித்தான்.“பத்துத் தலை காணோம். இருபது புயங்கள் இல்லை. இவன் இராவணன்