பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105



அல்லன்” என்ற முடிவுக்கு வந்தான். பொங்கிவந்த சினம் எனும் வடவா முகாக்கினியை, அறிவு எனும் கடல் நீர் கொண்டு அவித்தான்.


***

மற்று - பிறகு; குறுகி நோக்கி - அவனை நெருங்கிப் பார்த்து; அவன் - அந்த இராவணனுடைய; தலை ஒருபதும் - பத்துத் தலைகளும்; குன்றத்து இறுகு திண்புயம் இருபதும் - குன்றுபோல் பருத்து இறுகிய வலிய தோள்கள் இருபதும்; இவற்கு இலை - இங்குப் படுத்திருக்கும் இவனுக்கு இல்லை: எனா - என்று கண்டு ( அநுமன்) மறுகி - கலங்கி; எறிய - கொதித்து எழுந்த முனிவு எனும் - கோபமாகிய, வடவை வெம் கனலை - வடவா முகாக்கினியை, அறிவு எனும் - அறிவாகிய பெரும்; அம்பரவை நீரினால் - பெரிய அழகிய கடல் நீரினாலே; அவித்தான்.

***

அவித்து நின்று ‘எவன்
        ஆகிலும் ஆக’ என்று அங்கை
கவித்து நீங்கிடச் சில
        பகல் என்பது கருதாச்
செவிக்குத் தேன் என இராகவன்
        புகழினைத் திருத்தும்
கவிக்கு நாயகன் அனையவன்
        உறையுளைக் கடந்தான்.

“இவன் எவன் ஆயினும் ஆகுக. இன்னும் சில காலம் இப்படியே கிடக்கட்டும்” என்று கூறித் தன் உள்ளங்கை கவித்து ஆசி கூறி, அப்பால் சென்றான் வானரத் தலைவனான அநுமன்.

***