பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116



இறங்கின நிறங்கொள்
        பரி, ஏமமுற எங்கும்
கறங்கின மறங் கொள்
        எயில் காவலர் துடிக்கண்
பிறங்கின நறுங் குழலர்
        அன்பர் பிரியாதோர்
உறங்கினர் பிணங்கி எதிர்
        ஊடினர்கள் அல்லார்.

பல நிறங்கொண்ட குதிரைகள் உறங்கின; மதில் காவல் வீரர் தம் முரசங்கள் ஒலிப்பது நின்றது. கணவனுடன் ஊடல் கொண்டவரே உறங்காதிருந்தனர். காதலர் அன்பில் பிணைப்புண்டவர் உறங்கினர். அர்த்த ஜாம பறைகள் மட்டும் முழங்கின.

***

நிறங்கொள் பரி - பலவித நிறங்கொண்ட குதிரைகள்; இறங்கின - தலை சாய்த்து உறங்கின; மறங்கொள் எயில் காவலர் - வீரமுடைய மதில் காவலர்; துடிக்கண்- (அடிக்கும்) இரவு காவல் பறையின் முழக்கம்; ஏமம் உற - சாமத்துக்கு ஒரு முறை முழங்கின; எதிர் பிணங்கி ஊடினர்கள் - கணவரோடு ஊடல் கொண்டவர்கள்; அல்லார் - அல்லாதவர்களான; அன்பர் பிரியாதோரும் - தங்கள் காதலரைப் பிரியாதோரும்; பிறங்கின நறுங்குழலார் - விளக்கமும் மணமும் கொண்ட கூந்தல் உடைய மகளிரும்; உறங்கினர் - உறக்கம் கொண்டனம்.

***

இவ்விதம் சீதா பிராட்டியைத் தேடித் தெருதெருவாகச் சுற்றினான் அநுமன். அழகியதோர் மாளிகை தனித்திருக்கக் கண்டான். அதன் அழகை வியந்தான்.