197
அனுப்பினான் சூரியன் மகனாகிய சுக்ரீவன்” என்றான் அநுமன்.
***
ஆதலால் – ஆகையால்; தன் பெறல் அரும் செல்வமும் – பிறர் அடைதற்கு அரிய பெரிய செல்வமும்; ஓது பல் கிளையும் – பல பந்துக்கள் என்று சொல்லப்படுகிறவர்களும்; உயிரும் – உனது உயிரும்; உற – நிலை பெற்று இருக்க; சீதையைத் தருக என்னச் – சீதையை இராமன் பால் கொண்டு தருவாய் என்று; செப்பினான் – சொன்னான்; சோதியான் மகன் – சூரியன் மகனாகிய சுக்கிரீவன்; நிற்கு என்று சொல்லினான் – நினக்கு என் மூலம் சொல்லியனுப்பினான்; என்று அநுமன் இராவணனிடம் சொன்னான்.
***
இவ்வாறு அநுமன் சொன்ன உடனே சினங் கொண்டான் இராவணன்; அநுமனை கொன்று போடு என்று கட்டளையிட்டான்.
அப்போது விபீடணன் எழுந்து தமையனை வணங்கினான். தூது வந்தவரைக் கொல்வது அரச நீதி அன்று என்று புகன்றான்.
அதுகேட்ட இராவணன் கோபம் தணிந்தான். “விபீடணன் கூறியதும் சரியே” என்று ஏற்றுக் கொண்டான். அநுமன் வாலிலே தீ வைக்குமாறு கட்டளையிட்டான்.
வாலிலே தீ வைப்பதன் பொருட்டு அநுமனை இழுத்துச் சென்றார்கள் அரக்கர்கள்.
***
ஒக்க ஒக்க உடன் விசித்த
உலப்பிலாத உடல் பாசம்
பக்கம் பக்கம் இரு கூறாய்
நூறாயிரவர் பற்றினார்