இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
217
பிரிந்தவர் கூடுவர்; மாறுபட்டவர் ஒன்றிய கருத்துடையவராக மாறுவர் என்று கற்றறிந்தோர் கூறுவர்.
இந்நூலுக்குத் தேவையான நூல்களை–டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் அவர்களின் யுத்த காண்டம் முதல் மூன்று பாகங்களையும் கொடுத்துதவிய கலாக்ஷேத்திரத்தின் நிர்வாகி, உயர் திரு. சங்கரமேனன் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றி உரித்தாகுக.
நான்காம் பாகம் தந்துதவிய மறைமலையடிகள் நூல் நிலையத்திற்கும் எங்கள் ஆழ்ந்த நன்றி.
நவரசங்களை நாடகமாக்கி காட்டும் கம்ப நாடனின் பெருங்காவியத்தின் ஒரு சிறு துளியைத் தருகிறோம். தமிழ் அன்பர்கள் மேன்மேலும் இராம காதையைப் படித்து பயன் பெற வேண்டுகிறோம்.
வாழ்க தமிழ்! வாழ்க கவிச்சக்கரவர்த்தி!!
சக்திதாசன் சுப்பிரமணியன்
ஜலஜா சக்திதாசன்