278
‘உறங்குகின்ற கும்பகன்னனே! உங்களுடைய பொய்யான செழிப்பான வாழ்வு எல்லாம் (செல்வாக்கு) இன்று இறங்குவதற்கு (சீரழிய) தொடங்கிவிட்டது; இதனைக் காண்பாய்; எழுந்திருப்பாய், எழுந்திருப்பாய்; காற்றாடி போலத் திரிகின்ற வில்லைப் பிடித்த யமதூதரின் கையிலே இனி படுத்துறங்குவாய்!’ எனக் கூறினர்.
(கும்பகன்னன் சீக்கிரமே இறந்து போவான்! என்று அறிவுறுத்தினர்.)
உறங்குகின்ற கும்பகன்ன - தூங்கிக் கொண்டிருக்கின்ற கும்பகர்ணனே! உங்கள் மாயவாழ்வு எல்லாம் - உங்களது பொய்யான வாழ்வு எல்லாம்; இன்று இறங்குகின்றது காண் - இன்று இறங்கத் தொடங்கி விட்டது; காண் - காண்பாய்; எழுந்திராய் - எழுந்திராய்; கறங்கு போல - காற்றாடி போல; விற்பிடித்த - வில் ஏந்திய; கால தூதர் கையிலே-இயம தூதர் கைகளிலே; உறங்குவாய் - உறங்குவாய்; இனிக்கிடந்து உறங்குவாய்.
***
கும்பகன்னன் தன் அண்ணனை வணங்கினான்; அரக்கர்கோன் அவனை உபசரித்தான்; நெற்றியில் வீரப்பட்டமும் கட்டினான். கவசத்தையும் அணிவித்து போர்க் கோலஞ் செய்வித்தான்.கும்பகன்னன் ‘இக்கோலம் எதற்கு’ என்று கேட்டான்,
இலங்கேசனும் நிகழ்ந்தவற்றைச் சொல்லி, கும்பகன்னனை போருக்குச் செல்ல சொன்னான். கேட்டான் தம்பி இப்படி ஆகிவிட்டதே என்று வேதனைப்பட்டான்.
***
ஆனதோ வெஞ்சமர்
அலகில் கற்புடைச்
சானகி துயர்இனந்
தவிர்ந்த தில்லையோ