பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

நாம இந்திரன் வச்சிரப்
        படையும் என் நடுவண்
போம் எனும் துணை போதுமோ?
        யாது? எனப் புழுங்கும்.

வாலியும் சுக்கிரீவனும் ஒருவரை மற்றொருவர் தாக்கிப் போர் செய்தனர். மலையும் மலையும் மோதியது போல அவ்விருவரும் போர் செய்த காலை மறைந்திருந்த இராமன் வாலி மீது கணை ஒன்று ஏவினான். அந்த அம்பானது வாலியின் மார்பிலே பாய்ந்து துளைத்தது. அவ்விதம் அம்பு துளைக்கவே இது எவருடைய கணையோ? திருமாலின் சக்கராயுதமோ? நீலகண்டன் விடுத்த சூலமோ? இந்திரன் வச்சிராயுதமோ? அவற்றிற்கெல்லாம் என் மார்பு துளைக்கும் வலிமை இல்லையே! இது யாதோ தெரியவில்லையே!” என்று தவித்தான் வாலி.

நேமி தான் கொலோ - இப்போது என் மீது பாய்ந்துள்ள இந்தக் கணையானது திருமாலின் சக்கராயுதமோ? நீலகண்டன் - நீலகண்டனாகிய சிவபெருமானின்; நெடும் - நீண்ட சூலம் ஆம் இது ஆம் கொலோ - சூலாயுதம் இதுவோ? அன்று எனின் - இல்லையேல்; குன்று உருவு அயிலும் . மலையின் உருப்பிளந்த, ராம இந்திரன் வச்சிரப் படையும் - பிரசித்தி பெற்ற இந்திரனுடைய வச்சிராயுதமும்; என் நடுவண் - என் மார்பிலே ஊடுருவிச் செல்லும் துணை போதுமோ - வலியுடையதோ? யாது என? யாதோ தெரியவில்லையே என்று; புழுங்கும் - தவிப்பான்.

***