பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

45


வாய்மை சால் அறிவின்
        வாய்த்த மந்திர மாந்தரோடும்
தீமை தீர் ஒழுக்கின் வந்த
        திறத்தொழில் மறவரோடும்
தூய்மை சால் புணர்ச்சி பேணித்,
        துகள் அறு தொழிலை ஆகிச்
சேய்மையோடு அணிமை இன்றித்
        தேவரின் தெரிய நெற்றி

மந்திரிகள் எப்படி இருக்கவேண்டும்; வாய்மையுடையவராயிருத்தல் வேண்டும். அது மட்டும் போதுமா? போதாது. நல்ல அறிவில் முதிர்ந்தவர்களாயிருக்க வேண்டும்.

போர்த் தொழில் வல்லவரும் எவர்க்கும் தீமை செய்யாத நல் ஒழுக்கம் உடையவருமான படைத்தலைவர்களுடனும் கூடி, மந்திரி, சேனாதிபதி ஆகிய இரு சிறகுகளுடனும் நல்லுறவு கொண்டு, காட்சிக்கு எளியனாய் நெருங்குதற்கு அரியனாய், நற்செயல் புரிவாய்.

***

வாய்மை சால் - சத்தியத்தோடு கூடிய; அறிவின் - அறிவினால்; வாய்த்த - சிறப்பு அமைந்த; மந்திர மாந்த ரோடும் - மந்திரிகளுடனும்; தீமை தீர் ஒழுக்கின் வந்த - குற்றமற்ற நல் ஒழுக்கத்தோடு கூடிய; தொழில் திற மறவரோடும் - போர்த்தொழில் வல்லவரான சேனைத் தலைவரோடும்; தூய்மை சால் புணர்ச்சி பேணி - நல் உறவு கொண்டு; துகள் அறு தொழிலை ஆகி - குற்றமற்ற செயல் புரிவானாகி; சேய்மையோடு அணிமை இன்றி - காட்சிக்கு எளியனாய் நெருங்குதற்கு அரியனாய்; தேவரின் தெரிய நிற்றி - தேவர்கள் போல் கருதி உன்னை வணங்கும்படி நிற்பாயாக.

***