இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அயோத்தியா காண்டம்
முடிசூட்டு விழாவை எதிர்பார்த்த மக்களுக்கு பேரிடியாக வருகிறது, கைகேயியின் ஆணை.
அரசைத் துறந்து மரவுரி அணிந்து பிராட்டி உடனும் இளவலுடனும் வனம் செல்ல தூண்டி விட்ட மந்தரையை வெறுக்கிறோம்
இராமனுக்காக எதையும் செய்யத் தயாராக உள்ள குகனின் அன்பின் ஆழத்தைக் கண்டு வியக்கிறோம்.
அண்ணலின் பாதுகைகளைத் தலைமேல் சுமந்து செல்லும் பரதனைப் போன்ற கொள்கை வீரனைக் காணவும் கூடுமோ? வெறிச்சோடிய அயோத்தியைக்கண்டு மனம் புழுங்காமல் இருக்க முடியுமா?