பக்கம்:கம்பன் கவித் திரட்டு 4, 5, 6.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82



ஆகாய கங்கையினை
        அங்கையினில் அள்ளிப்
பாகாய செஞ்சொலவர்
        வீசுபடு அகாரம்.

சர்க்கரைப்பாகு போன்று தித்திக்கும் சொல்லினர் ஆகிய பணிப் பெண்டிர் அந்த மாட மாளிகைகளை எல்லாம் சுத்தம் செய்கிறார்கள். எப்படிச் சுத்தம் செய்கிறார்? மேகத்திலே தோன்றும் மின்னல் கொடிகளையெல்லாம் பிடித்து அடுக்கித் துடைப்பமாக வைத்துக்கொண்டு கீழே சிந்திக் கிடக்கிற மணம் வீசும் குங்குமக் குப்பைகளை எல்லாம் அப்புறப்படுத்துகிறார்கள். பிறகு, ஆகாய கங்கை நீரைத் தம் கையால் அள்ளித் தெளிக்கிறார்கள்.

***

அகாரம்-அம் மாளிகைகள்; பாகு ஆய செஞ் சொலவர் - சர்க்கரைப் பாகு போன்ற இனிய சொற்கள் பயிலும் பணிப்பெண்கள்; மாகாரின் மின்கொடி - பெரிய மேகங்களில் தோன்றும் மின்னல் கொடிகளை; மடக்கினர் அடுக்கி - மடக்கித் துடைப்பமாக அடுக்கிக் கையில் வைத்துக்கொண்டு; மீகாரங் எங்கணும் - மேல் மாளிகைகளில் எல்லா இடங்களிலும் உள்ள; நறும்துகள் விளக்கி - (அங்கு சிந்திக்கிடக்கும்) நறுமணமுள்ள கலவைப் பொடிகளான குப்பைகளை அகற்றி; அங்கையினில் - தம் உள்ளங்கைகளால்; ஆகாய கங்கையினை அள்ளி - ஆகாய கங்கை நீரை அள்ளி; வீசுபடு - வீசித் தெளிக்கப்படுவன.

***


நான நாண் மலர் கற்பக
        நறு விரை நான்ற
பானம் வாயுற வெறுத்த
        தாள் ஆறுடைப் பறவை