பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்

11


வந்தவர் – கொஞ்சம் நினைத்துத்தான் பாரேன். கண்டது காவிரிக் கரையிலா அல்லது காரைக்குடியிலா?

நான் – ஆமா, ஆமா! காரைக்குடியில் கம்பன் திருவிழாவில் மேடைமீது கொலுவீற்றிருக்கும்...

வந்தவர் - என்னையா கண்டாய்?

நான் – இல்லை. தங்கள் திருவுருவப்படத்தைக் கண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

வந்தவர் – ரொம்ப சரி. நான் தான் அந்த ஆசாமி. சரி, அது கிடக்கட்டும். இப்போது உட்கார்ந்து என்னமோ புரட்டிக் கொண்டிருக்கிறாயே? என்ன ஏடு அது?

நான் – இதுவா? இது தங்கள் சுயசரிதம் என்று நண்பர் சாஸ்திரியார் கூறுகிறார்.

வந்தவர் – என்ன! சுயசரிதமா? அது இங்கே எப்படி வந்தது?

நான் – என்ன - என்ன? அப்படி ஒன்று எழுதியிருக்கிறீர்களா?

வந்தவர் – எழுதினேன். ஆனால் அதை இந்தத் தமிழர்கள் படிக்கமாட்டார்கள் என்று எண்ணி வெளியிடவில்லையே. ஆனால், அது எப்படியோ இந்த மராத்திய மன்னன் கையில் அகப்பட்டுக் கொண்டதுபோல் இருக்கு.

நான் – எனக்கென்னமோ தங்கள் வார்த்தையில் நம்பிக்கையில்லை. இந்த ஏடு முழுவதையும் திருப்பிவிட்டேன். இதில் தங்கள் சுயசரிதைக் குறிப்பு ஒன்றுமே இல்லை.