இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11. கம்பன் – ஒரு கடல்
காரைக் குடி யதனில்
கம்பன் கவி அரங்கில்
பேராவ லுடன் கூடி
இருக்கின்ற பெரியோரே!
கவி அரங்கில் பங்குபெறும்
கவி வாணர் பெருமக்காள்!
கவி அரங்கின் தலைமையினை
கவின் பெறவே தாங்குகின்ற
தெய்வசிகா மணி அருணை
தேசிகனே! அன்புள்ள
தாய்மாரே! தம்பியரே!
தமிழறியும் சபையோரே!
உழைப்பதுவின் லக்ஷியமே
உன்னதத்தின் குறிக்கோளே
கழகச் செயலாளா!
கணேசப் பெருமானே!
உமக்கெல்லாம் உள்ளார்ந்த
அன்பு வணக்கங்கள்.