இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தொ. மு. பாஸ்கரத்தொண்டைமான்
173
மலர் மலராய் உருவாக்கி
மாலையெனவே தொடுத்து
சீலர்களாம் சிறுவர்.
செல்வத் தமிழருக்காய்
இன்றும் உதவுமொரு
இனிய கவிஞனவன்,
பன்னற் கரியதொரு
பண்பாடு பெற்றவனாம்.
இவ்விருவர் கவிதைகளும்
இனிய மழைத் தாரையென
செவ்வியுடை இளமனது
செழித்து வளர்வதற்கு
உற்றதொரு தாரகமாய்
உதவியது அந்நாளில்
கற்ற கவிதையெல்லாம்
கனிந்த கனியலவோ?
கவிதை இது என்று
கண்டறிந்த பின்னருமே
புவியிலுளோர் போற்றும்
புலவர் பலர் கண்டேன்.
சங்க இலக்கியங்கள்
சார்ந்த பெருங்காப்பியங்கள்
தங்கம் போல் மாற்றுயர்ந்த
அன்னவற்றில்,
அழகான இன்னிசையை
அற்புதமாம் ஆற்றொழுக்கை
பழக்கமிலாச் சொற்களிலே