பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/190

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188

கம்பன் சுயசரிதம்

நண்பர் இருவருமே
    நயமாகச் சொன்னதெலாம்
எண்ணுதற்கு உரியவையே
    என்றாலும், என்னுடைய
எதிர்ப்பெல்லாம் கம்பனுக்கு
    இதனாலே தானில்லை
முதிர்ச்சி யொடுஅறிவு
    முற்றும் உடையவர்கள்
கவியென்றும் கம்பனென்றும்
    காலங் கழிப்பதற்கு
புவியிலின்று நேரமில்லை
    புகல்கின்றேன், புகல்கின்றேன்
நாட்டின் நிலைதெரிந்து
    நடக்கத் தெரியாமல்
பாட்டென்றும் கூத்தென்றும்
    பணவிரயம் செய்கின்ற
கூட்டமதைப் பார்த்து
    கூறுகின்றேன் ஒருவார்த்தை.
ஆட்டமொடு கவிதை
    அரும்பசியைத் தீர்க்காது
போர்வந்து போயிற்று
    புதிதாய்ச் சுதந்திரமும்
ஊர்தேடி வந்துநமை
    உயரத்தில் வைத்தளது.
என்றாலும் நாட்டினிலே
    எல்லா இடத்தினிலும்
குன்றாத பஞ்சந்தான்
    கூத்திட்டு நிற்கிறது.
அரிசிக்குப் பங்கீடு

    அரைவீசைச் சர்க்கரைதான்