இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
30
கம்பன் சுயசரிதம்
நான் சைவனாகப் பிறந்தேன். மங்கை பங்கனுக்கே ஆட்பட்டேன் என்றாலும், இராமகாதை எழுத எழுத முழுக்க முழுக்க அந்த ராமனுக்கே அடியவன் ஆகிவிட்டேன். அழகனாக என் கவிதையில் பிறக்கிற ராமன், பின்னால் வீரனாக வளர்கின்றான், லக்ஷிய புருஷனாக வாழ்கின்றான். முடிவில் தேவ தேவனாகத்தான் காட்சி கொடுக்கிறான். அவன் மனிதருள் தலையாய மனிதன், மனிதருள் மாணிக்கம் என்றெல்லாம் தான் எண்ணினேன். என்றாலும் கடைசியில் அவன் மனித உருத் தாங்கிய தெய்வம் என்றே நிச்சயித்தேன். அதனால்தான் ராமன் அவதரித்ததால் தெய்வப் பிறப்பையும் மனிதப் பிறவி வென்று விட்டது என்று முடிவு கட்டினேன். அதை
- ஆறுகொள் சடிலத்தானும்
- அயனும் என்று. இவர்களாதி
- வேறுள குழுவை எல்லாம்
- மானிடம் வென்றது.
- ஆறுகொள் சடிலத்தானும்
என்று முதலில் சுக்ரீவன் கூற்றாகப் போட்டேன். ராமன் பின்னும் என் சிந்தையில் வளர்ந்து கொண்டே போனான். கடைசியில் அனுமன் வாயிலாக
- மூலமும் நடுவும் ஈறும்
- இல்லதோர் மும்மைத்தாய
- காலமும் கணக்கும் நீத்த
- காரணன், கைவில் ஏந்தி
- சூலமும் திகிரி சங்கும்
- கரகமும் துறந்து, தொல்லை
- ஆலமும் மலரும் வெள்ளிப்
- பொருப்பும் விட்டு அயோத்திவந்தான்
- மூலமும் நடுவும் ஈறும்
என்று சொன்னேன். பின்னும் சொன்னேன்.