பக்கம்:கம்பன் சுயசரிதம்.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

கம்பன் சுயசரிதம்

வடமொழிக் கவிஞனான வான்மீகி, ராமாயணத்தின் ஆதிகர்த்தாதான், இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தை வர்ணிக்க வேண்டிய அவசியம் ஒன்றை உண்டாக்கிக் கொள்கிறான். பஞ்சவடியிலே பர்ணசாலை அமைத்துக் கொண்டு, ராமனும் சீதையும் லக்ஷ்மணனும் வாழ்ந்து வருகிறார்கள். ராமன் மேல் தீராத மையல் கொண்ட சூர்ப்பனகை, சீதையைத் தாக்க முயன்று, இலக்குவனால் முக்கறுபட்டு, மானபங்கம் அடைகிறாள். சூர்ப்பனகையின் தூண்டுதலால் இராவணன் சீதையை எடுத்துப்போக விரைகிறான். மாயமானை ஏவுகிறான். இராமனையும் லக்ஷ்மணனையும் சீதையிடம் இருந்து பிரிக்கிறான். தனித்திருக்கும் சீதையிடம் மாய சந்நியாசி வேடத்தில் அணுகுகிறான். சீதாபஹரணத்தினால் என்ன என்ன விளைவுகள் உத்பாதங்கள் எல்லாமோ நேரிடப் போகிறதோ அரக்கர் குலத்தின் அழிவே அல்லவா அதனால் ஏற்பட இருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தில் இயற்கை எப்படி துடித்தது என்பதைச் சொல்ல விரும்பிய வான்மீகி

ஜனஸ்தானத்தில் நின்ற மரங்கள்
அசைவொழிந்தன
காற்று அடங்கிவிட்டது
கோதாவரி நதியும் பயந்து
அப்படியே ஸ்தம்பித்து மெல்ல
நகர ஆரம்பித்துவிட்டது

என்று நயமாகச் சொல்கிறார்.

இந்த வான்மீகி சொன்ன கதையே ஆசையோடு தமிழர்களுக்கு தர விரும்பிய கவிச் சக்கரவர்த்தி கம்பன் இதே கட்டத்தைச் சொல்கிறான்.


நடுங்கின மலைகளும்
மரமும் நா அவிந்து
அடங்கின பறவையும்
விலங்கும் அஞ்சின