இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
நல்ல நாடு
உலகின் சில பகுதிகளைப் புண்ணிய பூமி என்று கூறுகின்ற வழக்கம் இன்றும் உண்டு.
ஒரு நாட்டிற்கூடச் சில பகுதிகளை இவ்வாறு கூறும் இயல்பும் உண்டு.
இங்ஙனம் கூறும் வழக்கம் இன்று நேற்றுத் தோன்றியதன்று; மிகப் பழைய நூல்களிலும் இத்தகைய பழக்கத்தைக் காண்கிறோம்.
ஒரு நாட்டை நல்ல நாடு என்றும், புண்ணிய பூமி என்றும் எப்பொழுது கூறுகிறோம்? அந்த நாட்டின் வளப்பத்தையும் செல்வச் செருக்கையும் கொண்டு இப்பெயர் தோன்றுவதில்லை. பின்னர் என்ன காரணத்தால் இப்பெயர் வருகிறது: பழந்தமிழ்ப் புலவர்களுள் ஒருவராகிய ஒளவையார், இவ்வினாவை எழுப்பி விடையுங்கூறுகிறார்.
நாடாக ஒன்றோ காடாக ஒன்றோ
அவலாக ஒன்றோ மிசையாக ஒன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!
(187)