பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 0 அ. ச. ஞானசம்பந்தன் என்னதான் இருந்தாலும் கம்பனுடைய அடிமனத்தில் ஒரோவழி இந்த எண்ணம் தோன்றித்தான் இருத்தல் வேண்டும். தன்னுடைய காலில் நிற்க முடியாமல் தன்னுடைய குடும்பத்தார் தன்னைத் தனிப்பட்ட முறையில், சுதந்திரமாக வாழ வைக்க வாய்ப்பு இல்லாத காரணத்தினால்தானே சடையப்பரைப் போன்ற வள்ளலை அண்டியிருக்க வேண்டியிருக்கிறது என்ற மன நெருடல் ஏற்பட்டிருக்க வேண்டும். இதற்கு அடிப்படைக் காரணம் என்ன? உடையார், இல்லார் என்ற இரண்டு பெரும் பிரிவாகச் சமுதாயம் அமைந்திருந்ததுதான் காரணம். இந்த நினைவு ஆழமாகப் பதியப் பதியப் பெரும் கவிஞனாகிய அவன், இந்த உடையார்- இல்லார் என்கிற வேறுபாட்டோடு கூடிய சமுதாயத்தில் வாழும்போதே, 'இதெல்லாம் இல்லாத ஒரு சமுதாயம் இருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் திளைத்திருக்க வேண்டும். அப்படி அவன் கனவு கண்டதனுடைய விளைவுதான் நாட்டுப் படலத்தில் அவன் அமைத்திருக்கின்ற சமுதாயம். இக்கருத்தோடு கோசல நாட்டைக் கம்பன் எப்படி வருணிக்கிறான் என்று பார்க்கும்போது வியப்பு ஒன்றும் நமக்குத் தோன்றுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் வால்மீகி கோசலத்தைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆங்கு அவன் புகழ்ந்த காட்டை அன்பெனும் நறவம் மாந்தி முங்கையான் பேசலுற்றான் என்ன. யான் மொழியல் உற்றேன். . (கம்பன்- 32)