பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் ( 41 எனக் கம்பன் தனக்கு மூல நூலாகக் கொண்டதாகக் குறிப்பிடும் வான்மீகத்தில் கோசலம் என்ற பெயர் கூறப் படுவதைத் தவிர வேறு எந்தவிதமான வருணனையையும் வான்மீகி முனிவர் செய்யவில்லை. அந்த ஒரு சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு புதிய நாட்டைக் கற்பனை செய்கின்றான் கம்பன் என்றால், ஆழமான தூண்டுதல் ஒன்று ஏதேனும் இருந் திருக்க வேண்டும். அந்தத் தூண்டுதல்தான் அவன் சமைக்கக் கருதிய கற்பனைச் சமுதாய அமைப்பை, தமிழர்களுக்கு அறிவுறுத்தியது. - அன்றைய நிலையில் வறுமையுடைய மக்கள் தங்கள் பிள்ளைகளைக்கூட விற்கத் தயாராக இருந்தார்கள் என்பதைப் பெரிய புராணத்திலிருந்து அறிகிறோம். 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பரஞ்சோதியார்- பின்னர் சிறுத் தொண்டர் என்று புகழ் பெற்ற பெருமகனார்தம்முடைய மகனை அரிவதற்கு முன்னர் மனைவியிடம் பேசுவதைச் சேக்கிழார் அற்புதமாக எடுத்துக் காட்டு சிறார். 'மைந்தர் தமை நினைவு நிரம்ப நிதிகொடுத்தால் தருவாருளரே (சிறுத்தொண்டர் 56) என்று சொல்கிறார். ஆகவே, நிரம்பப் பொருள் கொடுத்தால் தங்கள் பிள்ளைகளை விற்கத் தயாராக இருந்தார்கள் என்று அறிகிறோம். - - - இதற்கு முன்னர், வடநாட்டில் வழங்கும் சுனச்சேபன் கதை இதை நன்கு வலியுறுத்துகிறது. நரபலி இடுவதற்காக ஒரு பிள்ளை வேண்டும் என்று அரசன் அம்பரீடன் பெரும் பணத்தை எடுத்துக்கொண்டு பிள்ளை வாங்கப் புறப்படு கிறான். மூன்று பிள்ளைகளையுடைய இரிசிகன் தன் முதல் பிள்ளையையும், அவன் துணைவி தன் கடைசிப் பிள்ளையையும் தாங்கள் வைத்துக்கொண்டு இடையில் நின்ற சுனச்சேபனைப் பொருளுக்கு விற்று விட்டார்கள் என்று அறிகிறோம். (கம்பன் 599, 601) ஆகவே,