பக்கம்:கம்பன் நோக்கில் நாடும் மன்னனும்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் நோக்கில் நாடும் மன்னனும் O 63 வருணனைகளில் இயற்கைக் காட்சிகளை மட்டும் வருணிக் காமல் அந்த நிலங்களில் வாழும் மனிதர்கள், உணவு வகைகள், வாழ்க்கைமுறை, எண்ண ஒட்டம், மேற்கொண்ட தொழில் என்பவை பற்றியும் விரிவாகப் பாடியுள்ளனர். திணைப் பிரிவு செய்த ஆசிரியர் தொல்காப்பியர், தெய்வம், உணாவே, மா, மரம், புள், பறை முதலான வற்றைக் கருப் பொருள் என்ற தலைப்பில் கூறிச் சென்றுள்ளார். எனவே, தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே நில வருணனை என்பது மிக விரிந்த நிலையில் பாடப் பட்டிருக்க வேண்டும் என்று நினைப்பதில் தவறில்லை. உதிரியான சங்கப் பாடல்களில் இடம் பெறாமல் நீண்டிருக்கின்ற மதுரைக் காஞ்சி, பட்டினப் பாலை, ஆற்றுப்படைகள் ஆகியவற்றுள் காணப்பெறும் நில (நாடு) வருணனைகளும் நகர வருணனைகளும் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஒரு திருப்புமுனை ஆகும். இந்த வளர்ச்சி, காப்பிய வடிவு பெற்ற சிலப்பதிகாரத் திலும் மணிமேகலையிலும் தனிப்பட்ட முறையில் ஏனோ இடம் பெறவில்லை. மதுரை, காவிரிப்பூம் பட்டினம் என்ற இரண்டு நகரங்களில் வாழும் மேட்டுக்குடி மக்களின் வாழ்க்கை முறையை விரிவாகப் பாடும் சிலம்பு, பாண்டிய நாடு, சோழநாடு என்ற அடிப்படையில் பொதுவாகப் பேசவில்லை. இவ்விரு காப்பியங்களை அடுத்துத் தோன்றிய உதயணன் கதையில் (பெருங்கதை) தனியாக இவ் வருணனைகள் பாடப்பட்டிருந்தனவா, இல்லையா என்று அறிய வாய்ப்பில்லாமல், காப்பியத்தின் முற்பகுதி .கிடைக்கவில்லை. இதனை அடுத்துத் தோன்றியவை பக்தி இயக்கக் காலப் பாடல்கள். அவற்றுள் இந்த வருணனைகள் எதிர்