இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இதேபோல ‘அரசியர் மூவர்’, ‘தம்பியர் இருவர்’ என்ற இரண்டு நூல்களிலும் புதிய கண்ணோட்டத்தில், அவற்றில் கண்டுள்ள பொருள்கள் பற்றி புதிய ஆய்வு நிகழ்த்தி அவற்றையும் அவ்வந்நூல்களில் பிற்சேர்க்கையாகத் தந்துள்ளேன்.
பழைய பகுதியோடு புதிதாக எழுதப்பட்டவற்றைத் தக்க இடங்களில் சேர்த்து, செப்பம் செய்ய உதவியவர் தமிழறிஞர் தமிழப்பன் எம்.ஏ., எம்.பில், அவருக்கு என் நன்றி உரியதாகும்.
என் உடல்நிலை காரணமாக எழுத முடியாத நிலையில் உள்ள நான் வாய்மொழிந்தவற்றை உடனுக்குடன் எழுதி உதவிய செல்வி சுப.தமிழ்மொழிக்கு என் நல்லாசிகள் உரியன.
சென்னை
அ.ச.ஞானசம்பந்தன்
1-5-1995