பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆரணிய காண்டம்

157



பொன்னை நிகர்த்த சீதை, நீல நிறத்தவனான இராமனைத் தழுவிக் கொண்டு நின்றாள். மேகத்தில் மின்னல் தோன்றியது. சூர்ப்பனகையின் சொற்களில் இடி தோன்றியது. கண்களில் நீர் பொழிய மழையை யும் கொண்டு வந்து சேர்த்தாள்.

“சிவபூசையில் சிந்தனையின்றிப் புகுந்த கரடி இவள் யார்'? என்று கேட்டாள்;

“இளைஞர் இருவர் புனையும் காதல் கவிதையின் இடையில் புகுந்த போட்டிக் கவிதை யாது”? என்று வினவினாள்; இது இடைப்பிறவரல் என்று நினைத்தாள்.

“இவள் அரக்கி மகள், மானுடவடிவில் வந்து உன்னை மயக்குகிறாள்; இவளை அகற்று; அடித்துத் துரத்து” என்று ஆணையிட்டாள்.

அதிகமானால் அமுதம் நஞ்சாக மாறிவிடும் என்பதை அறிந்தான் இராமன்; விளையாட்டு வினையாக மாறுகிறது; என்பதை உணர்ந்தான்.

“இவள் என் மனைவி; வாழ்க்கைத் துணைவி” என்று சொல்லாமல் செய்கையால் அறிவுறுத்தினான்; சீதையை அழைத்துக் கொண்டு சிரித்துக் கொண்டே பர்ணசாலையில் நுழைந்தான்.

“தம்பி நயவு காட்டமாட்டான்; என்னை நம்பி இங்கு இருக்க வேண்டா'” என்று கூறிவிட்டு அவளை விட்டு அகன்றான்.

“இன்று போய் நாளை வருகிறேன்” என்று கூறி விட்டு அவ் அரக்கி அந்த இடத்தைவிட்டு நகர்ந்தாள்.