பக்கம்:கம்பராமாயணம் (உரைநடை).pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

கம்பராமாயணம்



இவளும் ஒரு சூர்ப்பனகை என்பதை அறிந்தான். “நின்றால் உன் மூக்கும் செவியும் அறுபடும்” என்று அதட்டிப் பேசினான்.

அவள் அஞ்சவில்லை; கோபமும் கொள்ள வில்லை. இலக்குவனை வாரி எடுத்துக் கொண்டு வான்வழியே சென்றாள். தன் குகையில் அவனை வைத்து அவன் சினம் தணிந்ததும் அவனைத் தழுவி இன்பம் அடையலாள் என்று நினைத்தாள். இலக்குவன் சீற்றம் மிகக் கொண்டான். அவளிடமிருந்து விடுபடுவது எப்படி என்று எண்ணிக் கொண்டிருந்தான்.

இலக்குவனைப் பிரிந்த இராமனின் துயர் இரு மடங்காயிற்று. சீதையைப் பிரிந்த துயர் ஒருபுறம், இக்குவனை இப்பொழுது பிரிந்த துயர் மற்றொரு புறம். நீரைக் கொண்டு வரச் சென்றவனை யாரோ ஆபத்தில் சிக்க வைத்து இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான்.

“சீதையைக் கவர்ந்து சென்ற இராவணன் இவனையும் கடத்திச் சென்று விட்டானோ, அன்றிக் கொன்று தீர்ந்தானோ, சீதையைக் காவல் செய்வதில் நெகிழ்ச்சி பெற்றமைக்கு வருந்தித் தானே உயிர் துறந்தானோ” என்று பலவாறு நினைத்தான்.

கண்ணை இழந்தவன்போல் கதறி அழுதான் “உயிர் போன்று இருந்தாய். என்னைத் தவிக்கவிட்டுச் சென்றது பொருத்தமா?” என்று பிரலாபித்தான். “அரசு துறந்த போதும் தனி ஒருவனாக நீ என்னைப் பின் தொடர்ந்தாய்; என் துக்கத்தில் பங்கு கொண்டு என்னோடு வந்தாய். அத்தகைய நீ என்னை விட்டுப்பிரிந்து போதல் தகுமா?” என்று கூறி வருந்தினான்.