இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
134 கரிப்பு மணிகள்
அவனை இப்போது அந்த முதலாளி எதற்கு அழைக் கிறார்?
விருந்துக் கொட்டகை முன்னறையில் அவர் உட்கார்ந் திருக்கிறார். அருகில் நாச்சப்பன் நிற்கிறான். மூழுகாள் சோலையும் மூலையில் நிற்கிறான். அந்த நேரத்திலும் அவன் எதண்ணிர் போட்டிருக்கிறான். வாடை வீசுகிறது. தங்கராக
அங்கே வந்து ஒதுங்கி நிற்கிமான்.
ராமசாமி அங்கே நின்று என்ன என்பதைப் போல் நோக்குகிறான். கும்பிட்டு நிற்கவில்லை. -
- நீ தான் ஹைட்ரா பாக்குறவனா?”
“ஆமாம் என்று அவன் தலையசைக்கிறான்.’
- பேரு?’’ - *
இதுகூடத் தெரியாமலா கூப்பிட்டனுப்பினான்?
- ராமசாமி...’
- நீ எங்க வீடு வச்சிருக்கே?”
இதற்கு அவன் பதில் கூறுமுன் தங்கராக முந்திக் கொள்கிறான்.
- அங்க, தொரை அளத்துலேந்து வாரான், சொன் ரைனே?” -
- ஒ மறந்து போனேன். உனக்கு மிசின் வேல தெரி யின்னாங்க. பம்ப்செட்டு பாப்பியல்ல?”
‘பாக்கறது தான்...’
- இங்கேயே கோயில் பக்கம் வீடு வச்சிட்டு இருந்திடு. கசந்திநாதன் மிசின் பாக்கறான். அவனுக்கு ஒத்தாசையா நீயும் பம்ப்செட்டுகளைப் பார்த்து எண்ணெய் போடுவது போல வேலை செய்யிறே. இல்ல?”
அவன் எதுவும் பேசாமல் தலையாட்டுகிறான்.
- நீ இப்ப மாசச் சம்பளம் எவ் வளவு வாங்கறே?”
‘நூத்து முப்பத்தஞ்சு...இப்ப ஒருமாசம் நூத்தம்பது குடுத்தா...'