பக்கம்:கரிப்பு மணிகள்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராஜம் கிருஷ்ணன் I79

வங்களாச்சே? ஸால்ட் இன்ஸ்பெக்டர் லோன் கொலை கேசில் சிக்கினவங்கூட தலமறவாயிருக்கயில, இவ விட்டதா ஒளிச்சி வச்சிருந்தா. பொறவு...” ஏதோ நினைவுக்கு வந்தாற் போல் துர்க்கி வாரிப்போட்டாற் போல் மெளனமாகிறார்.

அவளுடைய Lurrri 65) 6/ உயரே எங்கோ நிலைக் கின்றன.

‘அவிய மவந்தா-ராமசாமின்னு பேரு. பணஞ்சோல அளத்துல மாசச் சம்பளமாயிருந்தா. இப்ப வேற பக்கம் சோலிக்குப் போறதாச் சொன்னா...’

படிச்சிருக்கிறானா?” ‘அத விசாரிக்கல. ஆனா படிச்சவங்களுக்கு மேல படிச்ச பயலாத்தாந் தெரியிறா. நாஞ் சொன்னன்னு காட்டிக்காதீய அவனாத்தா என்ன சொல்லுவான்னு தெரியாது. ஆனா பயனுக்கு இந்த புள்ள கிட்ட இட்டமாயிருக்கு. இவளுக்கும் இட்டந்தா. ஏதோ முன்ன பின்ன பாத்து ஏற்பாடு செஞ்சி கெட்டிப் போடணும்...”

முன்ன பின்ன... முன்ன பின்ன என்ன இருக்கிறது? ராட்டினம் போட்டு இரைக்கும் உப்பு நீர்க் கிணறும் கூட மூடிப்போகிறது. அவ்வப்போது தோண்ட வேண்டியிருக் கிறது. ஆனால் உப்பை நம்பிக் கஞ்சி குடிக்கும் தொழி லாளியின் வறுமைக் குழி மூடப்படுவதே இல்லை!

அருணாசலம் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு. இறங்கி நடக்கிறார்.

17

தட்டு வண்டியில், தகரப் பெட்டி, கரியேறிய சருவம் சுளகு, நார்ப்பெட்டி. சில பழுப்புதாள் புத்தகங்கள், தட்டு முட்டுச் சாமான்கள், பாய், சாக்கு ஒரு பன நார்க் கட்டில்: எல்லாச் சாமான்களுடனும் ராமசாமியின் தாய் பாக்கியத் தாச்சி அமர்ந்திருக்கிறாள். ராமசாமியே வண்டியை ஒட்டிக், கொண்டு வருகிறான். வண்டி மூன்றாந் தெருவினுள்டே