பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/178

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176



தாம் அழகென எண்ணியவற்றை யெல்லாம் அணிகள் என்க் கூறிவிட்டனர். ‘வாழ்க வாழ்க’ என வாழ்த்துவது வாழ்த்து அணியாம். இதனால்தான், ‘உட்கார்ந்தால் ஒர் அணி-ஓடினால் ஓர் அணியா’ என்று கேட்பவர்போல் தொல்காப்பிய உரையாசிரியராகிய பேராசிரியர் அணியிலக்கணக்காரர்களைச் சாடுகிறார். பிற்காலத்தில் புற்றீசல்கள்போல் எழுந்த அணிவகைகளை அணிகள் எனக் கூறப் பேராசிரியரும் நச்சினார்க் கினியரும் ஒத்துக் கொள்ளவில்லை.

தலைமை அணி:

(18) பிற்கால ஆசிரியர்கள் அணிகள் என்னும் பெயரில் தெரிவித்திருக்கும் பல செய்திகளைத் தொல் காப்பியர் பல விடங்களில் வேறு பல பெயர்களில் வெளி யிட்டுள்ளார். மற்ற ஆசிரியர்கள் பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று’ என்ற முறையில் பல அணிகளுள் ஒன்றாக உவமையைக் கூறியிருக்க, தொல்காப்பியர் உவமைக்குத் தனி இயல் (Section) வகுத்திருப்பது, ‘அணி களுள் த்லைமையானது உவமையணியே; அதிலிருந்துதான் வேறு பல அணிகள் பிரிந்தன என்னும் உண்மையை வலியுறுத்துகிறது. உவமை என்னும் நாட்டியக்காரி காவி யம் என்னும் நாட்டிய அரங்கில் பல்வேறு உருவம் தாங்கி நாட்டியம் ஆடுகிறாள், என்று சித்திர மீமாம்சை’ என்னும் நூலில் (16 ஆம்நூற்றாண்டு) அப்பைய தீட்சதர் என்னும் வடமொழி யாசிரியர் கூறியிருப்பதும் ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது.

3. தொல்காப்பியத்தில் ஒப்புமைக்கலை

உவமை இலக்கணம்:

(19) எந்த ஒருகலையும் பல்லாயிரம் ஆண்டு காலம்