பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
1

ஆண்மகன் தருவது


விந்தணு

பிறவி ஒரு பெரிய விந்தை. கண்ணுக்குத் தெரியாத ஒரு உயிர் அணு ஆச்சரியமாக உருவடைந்து அழகிய பூங் குழந்தையாக உலகத்தில் தோன்றுகிறது. ‘பனியிலோர் பாதி சிறு துளி மாது பண்டியில் வந்து புகுந்து’ அற்புதமான மானிடக் குழந்தையாக வெளிப்படுகிறது என்று அடிகளார் பாடுகிறார். அந்த விந்தணு எவ்வாறு கருப்பையில் சேர்கிறது, சேர்ந்து எவ்வாறு கருத்தரிக்கக் காரணமாகிறது, அக்கரு வளர்ந்து எவ்வாறு முகம், கை, கால் முதலான உறுப்புக்களைப் பெற்று ஆண் பெண் என்ற பாகுபாட்டையும் அடைந்து உலகத்திலே தோன்றுகிறது என்பனவற்றை எல்லாம் ஆராய்வது பெரிதும் சுவையுடைய செயல். அந்த ஆராய்ச்சி தான் இங்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. விளக்கப் படங்களின் உதவியைக்கொண்டு சுருக்கமாக அதைச் செய்ய முயல்வேன்.

கரு உண்டாவதைக் குறித்துச் சாதாரண மக்கள் பலவிதமான கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பொதுவாக அதற்கு ஆண் பெண்