பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு பரம்பரைகள் 21 கம்பங்கொல்லை விற்றாயிற்று! 'அந்தக் கொல்லையின் விலை யும், குலைக்கும்போதும் நாசுக்காகக் குலைக்கும் நாய்களின் விலையும் ஒன்று! அங்கே 250ரூபாயில் நாய் வாங்கினார்கள். இங்கே இரண்டு தலைமுறையாகக் குடும்பச் சொத்தாக இருந்த கம்பங் கொல்லையை 250-ரூபாய்க்கு விற்று விட் டார்கள்! இந்த நிலையிலே, பெயர் சுகானந்தம் என்று இருந்து பயன்? சுகமும் கிடையாது, ஆனந்தமும் கிடை யாது! தனபாலச் செட்டியார், ஒரு காலத்தில், சுகானந்தத் தோடு, சேர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தவர். சுகா னந்தம் இன்னமும், அந்தச் "சுவல்ப" வியாபாரத்திலே தான் இருந்து வருகிறார். தளபாலச் செட்டியாரோ, எப் 'படியோ இலட்சாதிகாரியாகி விட்டார்? என்றாலும், பழைய சினேகத்தை மட்டும் விட்டுவிடவில்லை. வீட்டிலே நடை பெறும் எந்தக் காரியத்துக்கும் சுகானந்த முதலியாரை அழைப்பார் 'சிலதுகள் அதிர்ஷ்டம் வந்ததும் தலைகால் தெரியாமல் ஆடும் நம்ம தனபாலு அப்படிப் பட்டவனல்ல' என்று சுகானந்தம் தன் நண்பர்களிட மெல்லாம் கூறுவான். 'ஏம்பா தனபாலு!' என்றுதான், சுகானந்தம் அழைப் பது வழக்கம். தேரிலே பேசும்போது. தன் நண்பர்களிடம் பேசும் போதும், தனபாலு என்று அழைத்த அதே சுகா னந்தமே, சில சமயங்களில் செட்டியார்' என்று அழைக்க வேண்டி நோட்டுவிடும். பங்களாவுக்கு ஒரு காவல் காரன் ஏற்பட்டு விட்டான். அவன் யார் உள்ளே போவதானா லும், "யார் ? என்ன வேலையாக வந்தீர்கள்?" என்று கேட்டுவிட்டுத்தான் அனுப்புவான். சுகானந்தமும், தன பாலும் ஓரே வியாபாரம் செய்தவர்கள், நண்பர்கள், என்று அவன் கண்டானா! தெரிந்தாலுந்தானென்ன! தன. பாலச் செட்டியார், அவனுக்கு எஜமான், சுகானந்தம், யாரோ ஒரு ஆசாமிதானே! அப்படித்தானே அவன் கொள்ள முடியும்? ஒரு நாள், சுகானந்தத்தையும் அவன், வாயற்படியண்டை நிற்க வைத்துவிட்டான்.'