பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரு பரம்பரைகள் 35 நாலைந்து வருஷங்களுக்குப் பிறகு ஓர் நாள் வெள்ளை' மீது கருப்பனை உட்கார வைத்து, வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தாள் அன்னம். "கருப்பண்ண சாமி' தயவால் பிறந்தான் என்று எண்ணி, தன் குழந் தைக்குக் கருப்பண்ணன் என்று பெயர் வைத்தான். சிங்காரம்.வெள்ளை அவன் வீட்டு நாய்; அது பிஸ்கட்டும் திண்பதில்லை, பாலும் குடித்ததில்லை; எங்கோ, எதையோ, எப்போதோ தின்றுவீடும், சிங்காரத்தின் வீட்டுக்குத்தான் காவல்புரியும். குழந்தைக்குக் குதிரையாக இருக்கும். கோலால் அடிபடும், ஆனால் வீட்டையும் மறக்காது, குடும் பத்தில் யாரைக் கண்டாலும் வால் ஆட்டிக் களிக்கவும் தவறாது. என்றைக்கேனும் ஓர்நாள் எச்சில் இலையிலே இரண்டுபிடி சோறுவைத்து அன்னம் கூப்பிடுவாள், வெள்ளே வெள்ளே!!" என்று. வெள்ளைக்கு அதுவே. விருந்து. வெள்ளை பிறந்த இடம் தெருக்கோடி பாழ் மண்டபம். தாயும், தந்தையும் தெருப்பொறுக்கிகள், தன பாலச் செட்டியாரின் வளர்ப்புகள் அல்ல. அந்தப் பரம் பரையில் பிறந்த 'வெள்ளைக்கு' விருந்துதானே அது. மனிதர்களிலே மட்டுமல்ல சகல ஜீவராசிகளிலும் இரண்டு வகையான பரம்பரை இருப்பதைச் சிங்காரம் தெரிந்து கொண்டான்; தெளிவு பெற்றான் !