பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/4

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 கற்பனைச்சித்திரம் சுறு சுறுப்பாகவும் வேலை செய்தால் பலன் உருவாகும் என்பது, துரைசிங்கத்தின் எண்ணம். யுத்த உதவித் தொகையின் அளவு உயர உயரத் தனக்கும் 'ராவ் சாகிபு பட்டத்துக்கும் இடையே உள்ள 'தொலைவு' குறையும் என்பது துரைசிங்கத்தின் எண்ணம். எனவே பூபதியைச் சுற்று அதிகமான சுறு சுறுப்புக் காட்டும்படி கேட்டுக் கொண்டார். பூபதிக்குக் கொஞ்சம் கோபம். இவன் அலை யட்டும்! சர்க்கார் இவனை யுத்தப் பிரசாரகர் என்று நிய மித்திருக்கிறார்கள் : மாதம் 500 சம்பளமும் தருகிறார்கள் ; இவன் அலைய வேண்டியது சரி; என்னை எப்படி இவன் அதிகமாக வேலை செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்க லாம்" என்று கருதியே கோபித்துக் கொண்டு, தனது. அந்தஸ்த்தைச் சுட்டிக் காட்டினார், துரைசிங்கத்திடம் " ஏன் ஊர் சுற்றித் திரியமாட்டான்! குடித்துவிட்டுக் கூத்தாடத்தான் செய்வான். ஏதாவது 'வித்து விசனம் கவலை கஷ்டம் இருந்தால்தானே. காளை மாடுபோலச் சுற்றி வருகிறான் இருப்பது பாழாகாதபடி பார்த்துக் கொள்ளவும், இவனுக்குச் சொத்து சுகம் தேடிக் கொடுக்க வும் நான் பாடுபட்டேன், அவன், அந்தத் தைரியத்திலே, உலகத்தைப் பற்றியே கவலை இல்லை என்று மதோன்மத்த னாகத் திரிகிறான். எந்த விலை ஏறினால் அவனுக்கென்ன. இறங்கினால் அவனுக்கென்ன! அவன் உண்டு, நண்பர்கள் உண்டு, என்று இருக்கிறான். விளைந்து வருகிறது, விற்றுப் பணத்தைக் குவிக்கிறார், செலவு செய்துகொண்டு குஷா லாக இருப்போம் எனறு உறவுகிறான். பாடுபட்டுப் பணத் தைச் சேர்க்கிற எனக்கல்லவா தெரியும். அதனுடைய அருமை” பூபதி, புவனேஸ்வரியின் நடனக் கச்சேரியை ஏற்பாடு செய்யப் போயிருக்கிறார்; கல்யாணி என்ற பாடகியை அழைத்துவரப் போயிருக்கிறார், என்ற செய்திகளை அடிக் கடி கேட்டுக் கோபங்கொண்டார் பெரிய மிராசுதாரர், பொன்னுராமர் தன் மகன் சர்க்கார் காரியமாகப் போய்