பக்கம்:கற்பனைச்சித்திரம், அண்ணாதுரை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 கற்பனைச்சித்திரம் னர். அவர் தம் அறிவு செல்லும் வழி அறவழி ஆகாது. அந்தணர் செய்த குற்றம் என்னை அவர் நம்மனோருக்கு இழைத்த தீங்கு தான் என்னை? என் கண்களுக்குப் பலனா வதில்லை. என் கண்கள் என்றால், எக் கண்கள்? புறத் துலகைக்கண்டு வெறியாட்டமிடும் கண்க ளா என்பிளைல். இக் இல்லை என்பேன், முக்காலும் இல்லை என்பேன். காலத்து மட்டு மல்ல, அக்காலத்து, அரசர்களையும் அரச அவைகளையும், அறிஞரையும், அவர் தம் அறநெறியினை யும், இகத்தையும், பரத்தையும், சேரன் நாட்டையும், சோழன் மண்டலத்தையும், பாண்டியன் பதியையும் குறுநில மன்னர் பலர் வாழ்ந்த பதிகளையும், அடியார்களை யும், அடியார்க்கடியார்களையும் கண்டு களிகொண்ட கண்கள்! என் கண்கள், இவ்வளவையும், இன்னும் பல வற்றையும் கண்டவை. ஏடுகளிலே கண்டேன்! இரும்பூ தெய்தி நின்றேன். அவ்வளவு கண்ட என் கண் களை, நான் நான் நம்பா திருக்கமுடியுமா? அவைகளைக்கொண்டே காண்கிறேன். அந்தணரை. அவர் தம் மீது ஆன்றோர்வழி செல்லாத மாபாபிகள் கில பலர். அடாதது கூறுகின் றனர். நெஞ்சம் நோகிறது. கொஞ்சமும் தாங்க முடியவில்லை இக் கொடுமையினை. அந்தணர் குற்றம் ஏதும் செய்திலர், செய்யார், செய்ய வழியும் அறியார். அவர் அந்தணாய்ப் பிறந்ததற்கே அஃதேயன்றோ காரணம்! இதோ, என் நண்பர், வேதசாஸ்திர விற்பன்னர்- அருணாசல ஐயர் அவர்கள் இருக்கிறார் இவர் முகத்திலே அந்த வெள்ளைக் கலை உடுத்திய மாது தாண்டவமாடுவது காணலாம். நெஞ்சிலே நாதன் தாள், கொஞ்சமும் வஞ்சம் அறியாதார். ஒன்று கூறுவேன் ! நான் இந்த நன்னிலை பெற்றதற்குக் காரணமே நமது ஐயர் அவர்களின் நற்கருணையும் தவி யுமே என்பதை நான் குன்றேறிக் கூவுவேன், அந்தணர் குலத்தைப் பழிக்கும் இழிதகையாளர் செவிகெடக் வேன். என்னுடைய புலமையைப் போற்றினீர்கள். பதிகத் தைப் பாராட்டினீர்கள் பட்டத்தைச் சூட்டினீர்கள். ஏட் டினைப் படித்தீர்கள். அந்த ஏடு ஏது ? நான் தீட்டியது! ப்டிபடி? திரு அருளால் தீட்டினேன். திரு அருள் கிட்டி கூவு