பேய்கள் உலகம்
53
கின்றன; சில குலோத்துங்கனின் வெற்றியைப் பாடி கைவீசி ஆடுகின்றன; சில யானைகளின் வயிறுகளில் புகுந்தும், இரத்த வெள்ளத்தில் விழுந்தும், விளையாடுகின்றன; சில தரையில் வீழ்ந்து புரண்டும் தலைவிரி கோலமாய் ஓடியும் ஆடுகின்றன. சில பேய்கள்,
பொன்னித் துறைவனை வாழ்த்தினவே
பொருநைக் கரையனை வாழ்த்தினவே
கன்னிக் கொழுநனை வாழ்த்தினவே
கங்கை மணாளனை வாழ்த்தினவே[1]
- [பொன்னி-காவிரி; பொருநை - தாமிரவரணி; கன்னி
கன்னியாகுமரி; கங்கை-கங்கையாறு]
எல்லாப் பேய்களும்,
யாவ ருங்களிசி றக்கவே; தருமம்
எங்கு மென்றுமுள தாகவே;
தேவ ரின்னருள்த ழைக்க வே;முனிவர்
செய்த வப்பயன்விளைக்கவே;[2]
வேத நன்னெறி பரக்க வேயபயன்
வென்ற வெங்கலிக ரக்கவே;
பூத லம்புகழ்ப ரக்க வேபுவிதி
லைக்க வேபுயல்சு ரக்கவே [3]
என்று சொல்லி வாழ்த்துகின்றன.
இவ்வாறு, சயங்கொண்டார் தன் கற்பனை ஆற்றலால் புதியதோர் பேய்கள் உலகத்தைப் படைத்துக் காட்டுகிறார். கவிஞர் மனித உலகை