பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
99



லியாக்கி அளித்த குலோத்துங்கன் செயல், புத்த சமயத்தின்பால் அவன் கொண்டிருந்த பற்றினைப் புலப்படுத்துவதாமன்றோ? இவ்வாறு கொற்றமும் கோலும் சிறக்க, ஒரு பேரரசை ஐம்பது ஆண்டு காலம் அளவும் கட்டிக் காத்த பெருமையுடையான், குலோத்துங்கன் ஒருவனே. வாழ்க அவன் குலப்புகழ்! வளர்க அவன் கோன் முறை!

口口口