பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114


எல்லை வரையும் ஆயிரத்து ஒரு நூறுகல் நீளம் உள்ள, படைபோகு பெருவழி ஒன்று போடப்பட்டிருந்தது.

நிலங்களை அளந்து மதிப்பிட்டு, விளைபொருள்களில் நாலில் ஒன்றை வரியாக வாங்கி வந்தார்கள். வரி வழங்கத் தவறிய நிலங்களை விற்று வரி பெறும் வழக்கமும் ஆட்சியில் இருந்தது. நிலவரி வாங்கிய அவ்வரசு, அந்நிலங்களுக்குத் தேவையான தண்ணீர் வளம் தருவதிலும் கருத்துன்றியிருந்தது. ஆங்காங்கே பெரிய பெரிய ஏரிகளை அமைத்தும், கால்வாய்களை வெட்டியும், நீர் போகு மதகுகளைக் கண்காணித்தும் நீர்வளம் கண்டார்கள். கத்தியவார் மாநிலத்தைச் சந்திரகுப்தன் அரசப் பிரதிநிதியாய் இருந்து ஆண்ட புஷ்யகுப்தன், ஆங்குச் “சுதர்சன ஏரி” என்ற பெயரில் எடுத்த ஏரியை வரலாற்று நூல்கள் வாயாரப் புகழ்கின்றன. .

மகதநாட்டு மக்கள், மனம் மொழி மெய்களால் தூய்மையுடையவர்களாகவே வாழ்ந்தார்கள். முறை கெட நடப்பவர்களைக் கண்டு ஒறுப்பதில், அக்கால ஆட்சியாளர் சிறிதும் பிறழாது நின்றனர். நீதிமன்றங்கள் நடுநிலை நின்று முறை வழங்கின. அரசியற் சட்டங்கள் சிறிதும் புறக்கணிக்கப்படுதல் கூடாது என்பதில் அரசனும், அவன் குடிகளும் ஒத்த கருத்துடையவராய்க் காணப்பட்டார்கள். குற்றம் நிகழ்ந்து விட்டால் கொடிய தண்டம் விதிக்கப் பெற்றது. ஒருவரை அடித்துப் புண் படுத்தினவரை அதே போல் அடித்துப் புண்படுத்துவதோடு அடித்த அவர் கைகள் குறைக்கப்படும்; அடியுண்டு புண்பட்டவர், அரண்மனையில் பணிபுரியும் நுண் கலைத் தொழில் வல்லுநராயின், குற்றம் புரிந்தவர்க்குக் கொலையே தண்டமாம். பொய்ச் செய்தி புகன்றவரின் உடலுறுப்புகளைக் குறைத்து உருவிழக்கப் பண்ணுவர். கட்வுட்டின்மையுடையவாகக் கருதப் படும் காவல் மரங்களுக்குக் கேடு விளைத்தவரும், நகராட்சிக்கு நல்க