பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115


வேண்டிய வரியை ஏமாற்றியவரும், அரசன் உலா வருங் கால் ஊடறுத்து ஓடியவரும் கடுந்தண்டம் பெற வல்லக் கொடுங் குற்றம் புரிந்தவராவர்.

இத்தகைய பார் புகழும் பேரரச வாழ்வில் இருபத்தைந்து ஆண்டுகள் இருந்து இன்புற்ற சந்திரகுப்தன் கி. மு. 297-ல் மண்ணுலகை விட்டு மறைந்து விட்டான். சமணச் சார்புடைய சில நூல்கள், அவன் தன் இறுதி நாளில் முடி துறந்து, முனிவனாய், மைசூர் நாட்டுச் சிராவண பெலகோலா அடைந்து அரிய தவம் ஆற்றி அழியாப் பெருநிலை அடைந்து விட்டான் என அறிவிக்கின்றன.

சந்திரகுப்தனுக்குப் பிறகு அவன் மகன் பிந்துசாரன் மௌரிய ஆட்சியை ஏற்று நடத்தினான். தன் தந்தை மேற் கொண்ட திருமணத்தால் ஏற்பட்ட கிரேக்க நாட்டாரின் நட்பை இவனும் போற்றி வளர்த்து வந்தான். மகஸ்தனிஸை அடுத்து, மற்றொரு கிரேக்க அரசியல் அறிஞன், மகத நாட்டிற்குத் தூதுவனாய் வந்து பாடலியில் பல்லாண்டு வாழ்ந்திருந்தான். செல்யூகஸுக்குப் பிறகு மாசிடோனிய மன்னனாய் மகுடம் புனைந்து கொண்டானைப் பதம் பண்ணப் பெற்ற அத்திப் பழங்கள், கொடி முந்திரிப் பழத்திலிருந்துபிழிந்தெடுத்த இனிய நறவு ஆகிய பொருள்களையும், வாதிட வல்ல ஒரு பேராசிரியனையும் அனுப்பும் படி பிந்துசாரன் வேண்டியிருந்தான். கிரேக்க நாட்டு அரசியல் சட்டம் அறிஞரை விற்கத் தடை விதிக்கிறது என்று கூறிப் பேராசிரியனை ம்ட்டும் தந்து உதவாது, ஏனைய இரு பொருள்களை மட்டும் அளவின்றி அனுப்பி வைத்தான் அந்நாட்டு அரசன். அக்காலை எகிப்தின் மன்னனாய் விளங்கிய இரண்டாம் தாலமியும், தன் நாட்டு அரசியல் தூதுவன் ஒருவனைப் பாடலி அரசவைக்கு அனுப்பி வைத்திருந்தான். மேனாட்டு இவ்வரசியல் தூதுவர் இருவரும் தம் முன்