பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

123


புலையனாய் வாழ்ந்தான்; விலங்குகளுக்கு வேதனையைத் தரும் வேட்டையை விளையாட்டாகக் கருதிக் கொடுமை செய்தான்; மது உண்பதிலும், மங்கையர் ஆடல் பாடல்களில் அகமகிழ்வதிலும் ஆர்வம் காட்டினான்; இவ்வாறு அறத்தைக் கை விட்டு வாழ்ந்த அக்காலத்தில் அசோகன் அரியணை ஏறும் ஆர்வத்தில், அதற்குத் தடையாய் நின்றாரைத் தயங்காது கொன்றேயிருப்பான்; பிந்துசாரனுக்கு அத்துணை பெரிய குடும்பம் இருந்தது என்பது ஏற்றுக் கொள்ளத் தகாத ஒரு கட்டுக் கதையன்று; கி.பி. பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்திருந்த பர்மா நாட்டு மன்னன் ஒருவன் தன்னுடைய எழுபத்தைந்தாவது ஆ ண் டி ல், நூற்றிருடத்திரண்டு மக்களையும் இருநூற்றெட்டுப் பெயரன்மார்களையும் விட்டுப் பிரிந்து விண்ணுலகடைந்துள்ளான். ஆகவே அது வரலாற்றோடு ஒட்டிய ஒர் உண்மை நிகழ்ச்சியேயாகும்; அசோகன் அரியணையேற்றம் அமைதியாகவே நிகழ்ந்தது என்று கூறும் அவர்கள், அது அவன் தந்தை இறந்து நான் காண்டுகள் கழிந்த பின்னரே நடைபெற்றமைக்குக் காரணம் ஏதும் காட்டினாரல்லர்; அல்லது அதை மறுத்தவருமல்லர். அதற்கு மகத நாட்டு அரண்மனையில் நிகழ்ந்த ஆட்சி உரிமைப் போர், அல்லது பொருந்தும் காரணம் பிற யாதாய் இருக்க முடியும் என்று வாதிட்டு அசோகன் கொலைக் குற்றத்தை உறுதி செய்வார்கள், சில வரலாற்றாசிரியர்கள்.

அரசிளங் குமரர்களைக் கொன்றோ, அல்லது அமைதியாகவோ அசோகன் அரியணையில் அமர்ந்து விட்டான். மகதப் பேரரசின் உரிமை பெற்ற மன்னனாய் மணி முடி சூட்டு விழாவும் நடைபெற்று விட்டது. வட மேற்கு இந்திய எல்லைக்கு அப்பாற்பட்ட ஆப்கானிஸ்தானம், பலுஜிஸ்தானம் முதல், தமிழகத்தின் வடவெல்லையாகிய வேங்கடம் வரை பரவிய ஒரு பேரரசின் காவலனாய்ப் பொறுப்பேற்ற அசோகன், தன் ஆட்சியின்