பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/145

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
143


அசோகன், அறளறநெறி வளர்க்கும் அடிகளாரை அனுப்பிவைத்தான் என்று கூறுகிறது. அசோகன் ஆசை நிறைவேறிவிட்டது; புத்தமதம், பிறந்த நாட்டில் மறைந்துவிட்டது என்றாலும் உலகப் பெருமதங்களுள் ஒன்று என்ற புகழ் நிலையை இன்றும் பெற்றுத் திகழ் கிறது. அசோகன் வளர்த்த புத்தமதம், இன்று இந் நாட்டில் இல்லை என்று கூறுமளவு குறைந்துவிட்டது என்றாலும், அம் மதத்தின் அறங்களாகிய, அன்பு, அருள், கொல்லாமை, வாய்மை, முதலாயின, பல்வேறு மதங்களுக் குள் புகுந்துகொண்டு, அழியாப் பெருநிலை பெற்று விட்டன. அருள் அறநெறி வளர்த்த அசோகன் புகழ், பொன்றாது நின்று விளங்குகிறது; வாழ்க அவன் புகழ்; வளர்க அவன் வளர்த்த அருள் நெறி!