பக்கம்:கலிங்கம் கண்ட காவலர்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
43

 கடார வெற்றியையும் புகழ்ந்து பாராட்டும் பாக்கள் பலப் பல. அவற்றுள் ஒன்று:

“கங்கா நதியும் கடாரமும் கைக்கொண்டு
சிங்காதனத் திருந்த செம்பியர் கோன்”

முதல் இராசாதிராசன்: பார் புகழும் பேரரசன், கங்கையும் கடாரமும் கொண்ட இராசேந்திரசோழ தேவனின் மூத்த மகன் இவன். தந்தையின் ஆட்சிக்காலத்தில் இருபத்தாறு ஆண்டுகள் வரையில் இளங்கோவாய் உடன் இருந்து, அரசியல் துறையிலும், அருஞ்சமர் முறையிலும் சிறந்த பயிற்சி பெற்றவன். அக்காலத்தில், சேரர், பாண்டியர், சிங்களர், சாளுக்கியப் போர்க்களப் பொறுப்பனைத்தையும் தான் ஏற்றுத் தந்தையின் தோள் சுமையைக் குறைத்துக் துணைபுரிந்தவன் இவனே. தந்தையின் ஆட்சிக்காலத்தில், தன் தம்பியின் ஆட்சிப் பொறுப்பிலிருந்த பாண்டி நாட்டிலும், சேர நாட்டிலும், அரசிழந்து தலை மறைந்து வாழ்ந்திருந்த அவ்வரசர் மரபில் வந்தோர்களும், சோழர்க்கு அடங்கிய குறுநிலத் தவைவர்களாய் ஆங்காங்கு ஆட்சி புரிந்திருந்தோரும், தனியாட்சி உணர்வுடையராகி விட்டனர்; மதுரை மாநகரிலிருந்து தம்மைக் கண்காணித்து வரும் சோழபாண்டியனை வீழ்த்தி விட்டு, விடுதலை பெறுதற்காம் வழிவகைகளை வகுத்துக் கொண்டிருந்தனர்; அதற்கேற்ற சூழ்நிலை உண்டாகும் வண்ணம், ஆங்காங்கு உள்நாட்டுக் குழப்பங்களை உண்டாக்கத் தலைப்பட்டனர். இஃதறிந்தான் சோழர் குல இளங்கோவாகிய இராசா திராசன்; அக்கலகங்களை அடக்கி அமைதியை நிலைநாட்டப் படையோடு புறப்பட்ட அவன், முதலில் பாண்டிய நாடு சென்றான். ஆங்குப் பெருங் குழப்பம் விளைவித்த பாண்டியர் வழி வந்தோராய, மானாபரணனையும், வீரகேரளனையும கொன்று, சுந்தர பாண்டியன் தன் உடைமைகளை எல்லாம் கைவிட்டுக் காட்டுள் சென்று கரைந்துறையும்படி